pidi new

பிள்ளையார் என்றதுமே நினைவுக்கு வருவது, தும்பிக்கையும், கொழுக்கட்டையும்தான். இதில் பல வகை உண்டு. ஆனாலும் பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தது பிடி கொழுக்கட்டை என்பது ஐதீகம்.

அந்த பிடி கொழுக்கட்டையை இன்று செய்யுங்களேன்.. அது பிள்ளையாருக்கு மட்டுமல்ல.. உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்!

என்ன தேவை?:

அரிசி மாவு – 1 கப்
வெல்லம் – ½ கப்
தண்ணீர் – 2 மற்றும் 1/2 கப்
தேங்காய் (துருவியடப) – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு

எப்படி செய்வது?:

வெல்லத்தை தட்டி நீரில் போட்டு அடுப்பில் வைத்து, நன்றாக கரையும் வரை கொதிக்க வையுங்கள். கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டி, ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்குங்கள்.

பாகு நன்கு கொதிக்கும் போது, அதில் ஏலக்காய் பொடி தூவி மீண்டும் கொதிக்க விடுங்கள்.

பின்பு தீயை குறைத்து, அதில் அரிசி மாவை மெதுவாக தூவிக் கொண்டே, கட்டிகள் சேராதவாறு தொடர்ந்து கிளறி விடுங்கள்.

ஒரு கட்டத்தில் மாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும். அப்போது, அடுப்பை அணைத்துவிடுங்கள். மாவு கொஞ்சம் ஆறி, வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளில் எண்ணெயைத் தடவிக் கொண்டு, அந்த மாவை சிறிது எடுத்து, கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைத்து வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்குங்கள்.

சூடான, சுவையான பிடி கொழுக்கட்டை தயார்!