
காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பாபு. வயது 45. முன்னாள் ராணுவ வீரரான இவர், பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் இன்று மது அருந்தினார். அப்போது திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்ந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள், பாபு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிவ காஞ்சி காவல் ஆய்வாளர் பிரபாகரன் விசாரணை செய்துவருகிறார்.
Patrikai.com official YouTube Channel