கேரளா:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜுன் 5-ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கேரளாவில் 2020 தென்மேற்கு பருவமழை ஜூன் 5 ஆம் தேதி தொடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி காணப்படும். இந்த அறிகுறிகள் கொண்டு தான் கேரளாவில் பருவமழை தொடங்கும். வழக்கமாக இந்த அறிகுறி மே மாதம் 20 ஆம் தேதிக்கு மேல் உருவாகும். ஆனால் இந்த ஆண்டு 6 நாட்களுக்கு முன்பே அந்தமான், நிகோபார் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

இதனால், கேரளாவில் ஜூன் 5 ஆம் தேதி பருவ மழை பெய்ய வாய்ப்பு என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து  உள்ளது.