சென்னை

டிஜிபி ஜெயராம் தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள கைது உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

திருத்தணி அருகே உள்ள களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

நேற்று இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின்பேரில் ஏடிஜிபி ஜெயராமன் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். ஏடிஜிபி ஜெயராமனிடம் திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. இதையொட்டி ஏடிஜிபி ஜெயராமனை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்தது.

உள்துறை செயலாளர் காவல்துறையினரின் பரிந்துரையின் பேரில் ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து உத்தவிட்டார். சிறுவன் கடத்தல் வழக்கில் தன்னை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இந்த மேல்முறையீட்டு வழக்கை நாளை பட்டியலிட்டு விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.