ஜெருசலேம்

மாஸ் படையின்  தாக்குதலில் இஸ்ரேலில் மேயர் உள்ளிட்ட 23 பேர் உயிரிழந்து 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.இதில் பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்கு கரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.

இன்று இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ என்ற பெயரில் திடீர் தாக்குதல் நடத்தின. இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன.

பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் மற்றும் ரிசர்வ் படைகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன., இஸ்ரேல் அந்நாட்டில் போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்குத் தயார் என்றும் அறிவித்துள்ளது.

‘ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்’ என்ற பெயரில் காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருக்கும் இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது..

அங்குப் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைத்தளத்தில் ”நாம் போரில் இருக்கிறோம், வெல்லுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.  இதுவரை இந்த தாக்குதலில் ,ஏயர் உள்பட 23 பேர் பலியாகி 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.