Prime-Minister-Ranil-Vickremesinghe-gives-an-explanation-today

கொழும்பு:
லங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று விளக்கம் அளிக்கவுள்ளார்.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை, கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் இலங்கையின் பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க அவர்கள் முன்வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.