
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிக கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்றுவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை அறிவித்ததில் இருந்து, அரசியல் களமும் சூடுபிடித்திருக்கிறது.
இந்த நிலையில், இன்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வரும்படி ஆளும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் தகவல் அனுப்பப்பட்டுது.
அனைத்து எம்.எல்.ஏக்களும் வந்த பிறகு, அவர்களிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய சூழலை பயன்படுத்தி மாற்றுக் கட்சி ஆட்சி அமைத்துவிடக்கூடாது, எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறிவிடக்கூடாது என்பதற்காக இந்த ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel