vijay

ட்லீ இயக்கி வரும் விஜய் படத்தின் ஷூட்டிங் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடந்துவருகிறது. விஜய் – ஏமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீபாவளிக்கு இப்படத்தின் பெயர் அறிவிக்கப்படுமாம். அதோடு பர்ஸ்ட் லுக் வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார்களாம்.

இந்தப்படத்துக்கு அடுத்து தான் நடிக்கும் படம் பற்றியும் இப்போதே சிந்திக்க ஆரம்பித்துவிட்டார் விஜய். இயக்குநர் யார் என்பதுதான் இப்போது பெரும் கேள்வியாக இருக்கிறது.

மோகன் ராஜா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்ட இயக்குநர்களிடம் கதை வாங்கியிருக்கிறார். அதாவது வழக்கம்போல கதையை கேட்காமல், எழுதிக்கொடுத்துவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார். இதில் பல கதைகள் விஜய்க்கு பிடித்திருக்கின்றனவாம். ஆனால், தனது புலி படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாததால், கதையை தேர்ந்தெடுப்பதில் மனைவி சங்கீதாவிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்.

சங்கீதாவும் கதைகளைப் படித்துவிட்டு, அதில் சில இயக்குநர்களை மட்டும் நேரடியாக அழைத்து விரிவாக கதை கேட்டு வருகிறார்.

இதனால், தற்போதைய பெயரிடப்படாத படத்தில் ரிலாக்ஸ்டாக நடித்துவருகிறார் விஜய்.

ஆனால் சங்கீதா யாரை, தேர்ந்தெடுப்பார் என்று பக் பக் மனநிலையில் காத்திருக்கிறார்கள் இயக்குநர்கள்.