mithunam
மிதுனம்

தன்னைப்போல் பிறரை நினைக்கும் மிதுன ராசி அன்பர்களே…
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களுக்கு பலவித தொல்லைகளைக் கொடுத்து வந்த ராகுபகவான் இப்போது ராசிக்கு மூன்றாம் இடத்தில் வந்து அமர்கிறார். இதனால் மனதில் உற்சாகம் பெருகும். தயக்கங்களை உதறி, மன உறுதியுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சமுதாயத்தில் அந்தஸ்துடன் விளங்குபவர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு மனை வாங்கும் யோகம் அமையும். குடும்பத்தில் திருமணம், காது குத்துதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இதனால் பொருள் செலவு கூடும். கவனம். பிற மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும்.
பக்தி பெருக்கு அதிகரிக்கும். சிலர் ஆன்மிக தலங்களுக்கு புனிதப்பயணம் செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை தடைபட்டு வந்த பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். இழுத்தடித்துக்கொண்டிருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் துவங்க நிதி உதவியை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை மனத்தின்மை கூடும். பழைய பிரச்சினை எதிர்கொண்டு வெற்றி பெருவீர்கள். குழந்தை இல்லாதோருக்கு. குழந்தை பாக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களகாக எதிர்பார்த்திருந்த பணம் வந்து சேரும். வியாபாரம் செழிக்கும். சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடுகளில் இறங்குவீர்கள். . அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
வழிபாடு: சேலம் மாவட்டம் நாகலூர் ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி அம்மனை வணங்குங்கள்.
கேதுவின் பலன்கள்:
உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்தில் அமர்ந்து அலைச்சலையும், பணிச்சுமையையும் தந்துகொண்டிருந்த கேது இப்போது ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்கிறார். ஆகவே, இதுவரை குழம்பி வந்த விசயங்களில் தெளிவு கிடைக்கும். மனதில் உற்சாகம் பெருகும். உடனிருந்து உங்களுக்கு மறைமுக தொல்லை அளித்துக்கொண்டிருந்தவர்களை அறிந்துகொள்வீர்கள். வெளிநாடு செல்ல முயற்சித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.
ஆனால் தந்தையின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. அதோடு, அவரது மனம் புண்படி நடந்துகொள்ளாதீர்கள். பூர்வீக சொத்துகள் குறித்து குடும்பத்துக்குள் பிரச்சினை ஏற்படலாம். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வீண் வழக்குகள் வந்து சேரும். கவனத்துடன் செயல்படுங்கள்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. மனைவியால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை காணாமல் போகக்கூடும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். . உடன்பிறந்தவர்களால் சிறு தொல்லைகள் ஏற்படும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். .
இந்த ராகு, கேது மாற்றத்தால் எந்த ஒரு காரியத்திலும் கடுமையான உழப்புக்கு பின்னரே வெற்றி கிடைக்கும்.