m 3

 சுமார் ஏழெட்டு மாதங்களிருக்கும்..

வயது முதிர்ந்து உடல் தளர்ந்து நடை தளர்ந்து சட்டென்று கண்டுபிடிக்க முடியாத சோகத் தோற்றத்தில் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் அழுது கொண்டிருந்த ஆச்சி மனோரமாவைப் பார்த்து நாங்களும் கசிந்துருகி கண்ணீர் வடித்து விட்டோம்.அவர் நின்றிருந்த இடத்தில்தான் அவருக்கு திருமணம் நடந்ததாம்.

எத்தனை கோடி மக்களை சிரிக்க வைத்தவர்.அதன்பிறகு அவர் தோன்றிய எந்த நகைச்சுவை காட்சியிலும் என்னால் சிரிக்கவே முடியவில்லை. நகைச்சுவை கலைஞர்கள் எவருமே கடைசி வரை சந்தோஷமாக வாழ்ந்ததுமில்லை.இறந்ததுமில்லை போலிருக்கிறது

கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா