a
காராஷ்டிராவில் பிரபலமான அரசியல்வாதி ஜகன் புச்பல். கடந்த தேசியவாத காங்கிரஸ் அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர்.
கடந்த 2008ம் ஆண்டு, மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி அரஜ்மல் கசாப்பை அடைக்க, மும்மை சிறைக்கு நிறைய பாதுகாப்பு ஏற்படாடுகள், வசதிகள் செய்து கொடுத்தவர் இவர்தான். ஆமாம்.. இவர் பொ.ப.து. அமைச்சராக இருந்தபோதுதான் பலவித பணிகள் அந்த மும்பை சிறையில் நடந்தன.
அதற்கு என்ன இப்போது என்கிறீர்கள?
லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கி, சிறைத்தண்டனை பெற்ற இவர், அதே மும்பை சிறையில்தான் அடைக்கப்பட்டிருக்கிறார்.
ஆம்.. தனது உத்தரவால் எந்த சிறையை மேம்படுத்தினாரோ. இப்போது அதே சிறையில் அதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு சிறைப்பட்டிருக்கிறார் ஜகன் புச்பல்.
காலம் செய்த கோலம்?