b

பாலா  இயக்கத்தில் ஐந்து நாயகர்கள் நடிக்கப்போகிறார்கள்!

தனது “பரதேசி” படத்துக்குப் பிறகு, தற்போது சசிகுமாரை வைத்து “தாரை தப்பட்டை” படத்தை இயக்கி வருகிறார் பாலா.

அடுத்த படத்தில்தான் ஐந்து நாயர்களாம். விஷால், ஆர்யா, அரவிந்தசாமி, அதர்வா, ராணா ஆகிய கதாநாயகர்கள்தான் அவர்கள்.

வரும் ஜனவரி மாதம். படப்பிடிப்பு தொடங்குகிறது.

இதற்கு முன்பு தமிழில், ‘கின்னஸ்’ சாதனைக்காக உருவான ‘சுயம்வரம்’ என்ற படத்தில் மட்டுமே பல கதாநாயகர்கள் இணைந்து நடித்தார்கள்.   அதன் பிறகு  ஐந்து பிரபல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் படம் இதுதான் என்பதால் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது!

அதே நேரம், “ஒரு நாயகனையோ முழியைத்தோண்டி, தலைசீவ விடாம ரகளை பண்ணிடுவார் பாலா.. இதுல அஞ்சு பேரையும் என்ன பாடு படுத்தப்போறாரோ..? அதிலும் அழகான அரவிந்தசாமியை..” என்ற கவலை இப்போதே ரசிகர்களுக்கு வந்துவிட்டது!

அது இருக்கட்டும்.. “பரதேசி” பட ஷூட்டிங்கில நடிகர்களை பொளந்துகட்டினாரே.. அரவிந்தசாமி தாங்குவாரா?