ajith-thiruppathy-4

ல்லா பிரச்சினையும் முடிந்து வரும் 10ம் தேதி வேதாளம் ரிலீஸ் உறுதியாகிவிட்டது. அதற்காக ஏழுமலையானுக்கு தேங்கஸ் சொல்ல, திருப்பதி சென்றிக்கிறார் அஜீத்.

நேற்று இரவு திருமலை வந்த அஜீத் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தார். அவரைக் கண்டதும் ரசிகர்கள், சூழ்ந்துகொண்டு கோஷம் எழுப்பினார்கள். அவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட அஜீத், பொறுமையாக ஒவ்வொருவருடனும் செல்பி எடுத்துக்கொண்டார்.

தரிசனம் முடிந்து வெளியே வந்த அஜித், “எனது ரசிகர்கள் எல்லோரும் என் இதயத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

அது சரி.. கால்ல அடிபட்டிருக்கு… அதான் நடிகர் சங்க தேர்தல்ல ஓட்டுப்போடலை… நடிகர் விவேக் மகன் இறப்புக்கு நொண்டி நொண்டி வந்தாரு… இதெல்லாம் என்னன்னு கேக்கிறீங்ளா… சரி விடுங்க பாஸ்.. சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா!