க்னோ

மாயாவது குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ வெளியீட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்

.

தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக வட இந்திய மாநிலங்களில் திருமணமான பெண்கள் விரதம் இருந்து பூஜை வது ‘கர்வா சவுத்’ என்று அழைக்கப்படுகிறது.  இவ்விரதம் இருக்கும் பெண்கள் மாலை நேரத்தில் சல்லடை வழியாக நிலவைப் பார்த்து, பின் தங்கள் கணவனின் முகத்தை பார்க்கின்றனர். கணவன் தரும் தண்ணீரை குடித்து விரதத்தை நிறைவு செய்கின்றனர்.

இந்த கர்வா சவுத் விரதத்தை வைத்து உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாவேஷ் சயினி  என்ற இளைஞர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் புகைப்படத்தை சல்லடை வழியாக பார்ப்பது, தண்ணீர் கொடுப்பது உள்ளிட்ட செய்கைகளை அந்த வீடியோவில் செய்துள்ளார்.

வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் அதிர்ச்சியடைந்த பகுஜன் சமாஜ் ஆதரவாளர்கள், தங்கள் கட்சியின் தலைவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் அளித்த  புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, வீடியோ வெளியிட்ட லாவேஷ் சயினி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.