க்னோ

த்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹத்ராஸ் சம்பவம் தொடராக நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன் தினம் உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா சாமியார் நடத்திய இந்து மத ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது.

121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவ்ர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு திடீரென போலே பாபா தலைமறைவானதால். இவரை உத்தரப்பிரதேச காவல்துறை தேடி வருகின்றது.

நேற்று ஹத்ராஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம்

“ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 6 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை குழுவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் இடம்பெற்றிருப்பார்கள். இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வோம்”

என்று தெரிவித்துள்ளார்.