சென்னை

ரசு பேருந்துகளில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல நேற்று ஒரே நாளில் 35140 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

நாளுக்கு நாள் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயணிகள் நீண்ட தூரம் செல்லக்கூடிய விரைவு பேருந்துகளில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி போன்றவை இருப்பதால் அதிகளவில் பயணிக்க தொடங்கி உள்ளனர். 60 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளதால், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் கடந்த 1, 2-ந் தேதிகளில் முன்பதிவு செய்தனர்.  நேற்று அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்காக முன்பதிவு தொடங்கியது.

நேற்று ஒரே நாளில் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய 35,140 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இதற்கு முன்பு 2018 ஜன.12ல் அதிகபட்சமாக 32,910 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அதை விட அதிக பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

தற்போதுதென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் நிரம்பி விட்டன. பண்டிகை முடிந்து நவம்பர் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வருவதற்கும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. முதல் கட்டமாஅ 1,500 பேருந்துகளுக்கு முன்பதிவு நடந்து வருகிறது. வழக்கம் போல சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்பட உள்ளன.