சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிருக்காக, ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை இன்று தொடங்கி வைத்தார். மு.க.ஸ்டாலின்..! புற்றுநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மகளிருக்கான 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் சேவை தொடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகளிர் நலமே சமூக நலம் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இந்த மருத்துவ ஊர்திகள், தலா ரூ.1.10 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டது. இந்தஅதிநவீன நடமாடும் மருத்துவ ஊர்தியை முதலமைச்சார் பார்வையிட்டார். புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின்கீழ், டிஜிட்டல் மேம்மோகிராபி, ஈசிஜிகருவி, செமி – ஆட்டோ அனலைசர் உட்பட பல வசதிகளுடன் இந்த ஊர்திவ டிவமைக்கப்பட்டுள்ளது.
ரூ.40 கோடிசெலவில் வாங்கப்பட்டுள்ள இந்த 38 நடமாடும்மருத்துவ ஊர்திகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மகளிர் நலமே சமூக நலம்! இந்தியாவிலேயே முதல்முறையாகப் பெண்களுக்கான புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, இதய நோய்கள் பரிசோதனை செய்யத் தொடங்கி வைத்துள்ள, மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவைத் திட்டத்தைப் பெண்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
காஞ்சியில் தொடங்கும் இந்தத் திட்டம், மகளிரிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகளுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் வரும் ஜனவரி மாதம் விரிவுபடுத்தப்படும். மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய் முதலியவற்றைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து நம் பெண்களின் நலனைக் காக்கும் இந்தத் திட்டத்தை இந்தியா மொத்தமும் பின்பற்றத்தக்க வகையில் செயல்படுத்திக் காட்டுவோம்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/i/status/1988848729059913888