வாஷிங்டன்.
மெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக தற்போதைய அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேலி ஒபாமா பிரசாரம் செய்தார்.
அப்போது, பெண்களை பற்றி மோசமாக கருத்து தெரிவிக்கும் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக பெண்கள் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
trumphj
ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக்காவில் நவம்பர் 8–ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தொழில் அதிபரும், பெரும் கோடீசுவரருமான டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர். தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
டொனால்டு டிரம்ப் எதையாவது பேசி தொடர்ந்து  சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார். ஏற்கனவே  கடந்த 2005–ம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்ததாகவும்,. அப்போது அவர் தான், பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிறபோது ஒருவர் எதையும் செய்யலாம் என கூறி உள்ளார்.
அவரது பேச்சு இடங்கிய வீடியோ தற்போது வெளியானது. இதன் காரணமாக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், அவரது நடவடிக்கைகள் அவரது சொந்த கட்சியிலேயே விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
obama
மேலும், டிரம்ப் எங்களிடம் தவறாக நடந்துகொண்டார் என 3 பெண்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது பெண்களிடையே மேலும் டிரம்ப் குறித்து தவறான எண்ணத்தையே ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, டிரம்ப் பேச்சை  வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அமெரிக்காவின்  நியூகோம்ஷயர் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஹிலாரிக்கு ஆதரவு திரட்டி,  அவர்  பேசியதாவது:
டிரம்பின் செயல் பெண்களை  அவமதிப்பதாகும்.  அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும்  டிரம்பின் வார்த்தைகளையும் செயல்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது.
அவரின் வார்த்தைகள் அதிர்ச்சியூட்டக்கூடியவை.தலைவர்களுக்கு நாகரீகம் அவசியம்.இது வழக்கமான அரசியல் அல்ல. வாக்களிப்பது முக்கியம். அதே நேரம்  டிரம்ப் போன்ற வேட்பாளர்களுக்கு எதிராகப் பெண்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.