கேரள மாநிலம் திருச்சூரில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அங்கமாலியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி செல்லும் வழியில் பேருந்தில் இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடிரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து பேருந்து மருத்துவமனைக்கு திருப்பிவிடப்பட்டது.

பேருந்து மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே அவருக்கு பிரசவ வலி அதிகரித்து குழந்தை பிறந்தது.

தனியார் மருத்துவமனை வாசலில் வந்து நின்ற பேருந்தை பார்த்ததும் ஸ்ட்ரெச்சர் எடுத்துவரப்பட்ட நிலையில் அந்தப் பெண் ஏற்கனவே பிரசவிக்க ஆரம்பித்தது தெரியவந்தது.

https://x.com/SparkMedia_TN/status/1795859116038189312

இதனையடுத்து அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பேருந்துக்குள் சென்று அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.