சென்னை

சென்னையில் ஒரு பெண்ணின் சடலம் சூட்கேசில் துண்டு துண்டாக இருந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

                                                        மணி                                                     தீபா

 

சென்னையில் துரைப்பாக்கம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை மீட்டு திறந்து பார்த்ததில், பெண் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுக்கபட்டுள்ளது.

காவல்துறையினர் அந்தப் பெண்ணின் உடலை மீட்டு உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண் மணலியை சேர்ந்த தீபா (32 வயது) என்றும் திருமணமாகாதவர் என்றும் தெரிய வந்துள்ளது.

காவல்துறையினர் தீபாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை நடந்தது எனக் கண்டறிய விசாரணையை தீவிரப்படுத்தினர் சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே வசித்து வந்த மணி என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையிஅர் கைது செய்யப்பட்டுள்ள மணி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . விசாரணையில் கொலைக்கான காரணம் தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை சென்னையின் மிக முக்கியமான இடத்தில் நடைபெற்றுள்ளதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.