சென்னை: தனியார் கல்லுாரிகள் மற்றும் விடுதிகளை கொரோனா சிகிச்சைக்கான தற்காலிக மருத்துவமனைகளாக, தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது; கொரோனா வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, தனிமைப்படுத்தல் பிரிவுகள் அமைக்கப்படுகின்றன.

ரயில் பெட்டிகளும்கூட தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றப்படுகின்றன. மருத்துவமனைகள் மட்டுமே கொரோனா சிகிச்சைக்குப் போதுமானதாக இல்லாத காரணத்தால், தனியார் கல்லுாரிகளையும், மாணாக்கர்கள் விடுதிகளையும் பயன்படுத்தலாம்.

எனவே, தனியார் கல்லுாரிகளையும் விடுதிகளையும் தற்காலிக மருத்துவமனைகளாக, தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உரிய பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர். அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜரானார்.

[youtube-feed feed=1]