சென்னை: இந்த ஆண்டாவது மழை பாதிப்புகளில் இருந்து தப்புமா சென்னை?  என சென்னைவாசிகள் பதற்றத்துடன் வடகிழக்கு பருவமழைய எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், சென்னை மாநகராட்சி துணை மேயர் சுரேஷ்குமார் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

மழை காலத்தில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருவது அனைவரும் அறிந்ததே.  கடந்த ஆண்டுகூட ம வெள்ளத்தால் பல பகுதிகள் சூழப்பட்டு பொதுமக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகினர். இந்த வெள்ளப்பாதிப்பை தடுக்க திமுகஅரசு பதவி ஏற்றதும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டு, பல்வறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் முடிவு பெற்று விட்டது சில அமைச்சர்கள், அதிகாரிகள் கூறினாலும், பல இடங்களில் இன்னும் பணிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக வடன்னை பகுதிகளில் மழைநீர் தேங்குவது தொடர்கதையாகி வருகிறது. அங்கு இதுவரை போதுமான மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், தமிழ்நாடு அரசு அதிகாரிகளும், முதலமைச்சர் ஸ்டாலின், மேயர் பிரியா உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள்  சென்னையில் இந்த ஆண்டு மழைநீர் தேங்காது  என கூறி வருகின்றனர். ஆனால், அவர்களின் கூற்றை பொய்யாக்கும் வகையில் பல பகுதிகளில் சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கி பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாடு அரசு, மற்றும் மாநகராட்சி மீது  பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.  வீட்டுவரி, தண்ணீர் வரி, மின்சார கட்டணம் என அனைத்துவிதமான கட்டணங்களையும் உயர்த்தி உள்ள தமிழ்நாடு அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளைக்கூட முறையாக நிறைவேற்ற வில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில்  வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம்  வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. இதுவே தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே – குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்வதுடன், புயல் சின்னங்களும் உருவாகி பெருமழையை கொடுக்கும். இதனால் பல இடங்களில் மழை வெள்ளம் ஏற்படும் அபாயமும் உண்டு.

இதனால், தமிழ்நாட்டில் உள்ள  அனைத்து மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை என்னென்ன, இந்த  ஆண்டு சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளிப்பதில் இருந்து பாதுகாக்க படுவார்களா என்பது குறித்து சென்னை மாநகராட்சி துணை மேயர், ஊடகம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அவர் என்ன சொல்யிருக்கிறார் என்று பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டு வரும் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார்  ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.  அதன் விவரம் வருமாறு:?

 “சென்னையில் 2000 கிலோ மீட்டர் அளவிற்கு தான் மழை நீர் வடிகால் இருந்தது. தற்போது கூடுதலாக 1000 கிலோமீட்டருக்கு மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு, புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு எல்லாமே ஒரே நேரத்திலிருந்தது. இதன் காரணமாக தண்ணீரை, கடல் உள்வாங்காமல் தேங்கி நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து சென்னை மாநகராட்சியில் தண்ணீர் எங்கும் தேங்காத வண்ணம் அடிப்படை கட்டமைப்புகளையும், அதற்கான பணிகளையும் செய்ய வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் அசோக் நகர், கோடம்பாக்கம், மயிலாப்பூர் பகுதிகளிலும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. (பணிகள் இன்னும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

ஒரு சில பகுதிகளில் கால்வாய் அமைத்தாலும், அந்த பகுதிகளில் தண்ணீர் வழியாத சூழல் இருக்கிறது. குறிப்பாக தி.நகர், கோடம்பாக்கம், லிபர்டி தியேட்டர் அருகே இருக்க கூடிய பகுதிகள் இயற்கையாகவே தாழ்வாக அமைந்த பகுதிகளாக இருக்கின்றது. இது போன்ற பகுதிகளில் நிரந்தரமாக மோட்டார் ஒன்றை பொறுத்தி அங்கு தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 700 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் மோட்டார்களை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் தற்போது கோரப்பட்டு இருக்கிறது. விரைவில் அந்த பகுதிகளில் மோட்டார்கள் பொருத்தப்பட்டு மழைக்காலங்களில் தேய்க்கும் தண்ணீர் அகற்றப்பட உள்ளது.

குறிப்பாக மழைக்காலங்களில் வேளச்சேரி, மேடவாக்கம் போன்ற பகுதிகளில் அதிகளவு தேங்கும் தண்ணீரை வாரங்கால் ஓடை பகுதியில் தேங்காமல் தூர்வாரப்பட்டு வருகிறது. வாராங்கால் ஓடைநில் வரும் தண்ணீர் ஒக்கியம் மதகில் சேகரிக்கப்படும் என்பதால் ஒக்கியம் மதகில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான கூட்டம் சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், மா.சுப்ரமணியன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு, எ.வ.வேலு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அதிகமாக தேங்கும் பகுதிகளில் மின்சார பகிர்வு பெட்டியானது தாழ்வான பகுதியில் இருப்பதால் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதை கொஞ்சம் உயர அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். அதற்கு மின்சாரத் துறை அமைச்சர் அதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

வடிகால் பணிகள் தொய்வு?: சென்னை மாநகராட்சி உடன் மற்ற துறைகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள், ரயில்வே பணிகள் நடைபெற்று வருவதால் மழைநீர் வடிகால் கால்வாய்கள் பணி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்றார்.

மழை நேரங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதால் தொற்று ஏற்படுகிறது? என்ற கேள்விக்கு பதில் அளித்த துணை மேயர்” மழை வடிகால் கால்வாய்களின் ஏற்படும் அடைப்புகளைச் சரி செய்வதற்குச் சென்னை குடிநீர் வாரியம் உதவியுடன் சிறப்புக் கருவிகள் மூலமாக உடனடியாக அதன் அடைப்புகளை சரி செய்து வருகிறோம்.

பொதுமக்களும் மழை வடிகால் கால்வாயில் குப்பைகளை கொட்டாமல் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதே போல் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் ஜெனரேட்டர் மூலமாக இயங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

அதிக மழை பொய்தாலும் பகுதி இருக்கக் கூடிய மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. முகாம்களில் தங்கும் மக்களுக்கு சுகாதாரமான உணவு, சுத்தமான குடிநீர், மருத்துவ ஏற்பாடுகள் மாநகராட்சி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதிக அளவு மழை பெய்தாலும், புயல் ஏற்பட்டாலும் அது எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி தயார் நிலையில் இருக்கிறது” என தெரிவித்தார்.

மொத்ததில் சென்னையில் இன்னும் மழைநீர் வடிகால் பணிகள் முடியவில்லை என்பதே துணைமேயரின் பேட்டியில் இருந்து தெரிய வந்துள்ளது. மக்கள் தங்குவதற்கு முகாம்கள் தயாராக இருப்பதாக துணைமேயர் கூறியிருப்பதால், இந்த வடகிழக்கு பருவமழை காலத்திலும் சென்னை மக்கள் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தி உள்ளார்.

நன்றி: ஈடிவி பாரத் 

சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் பாதிப்பு வராது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

சென்னையில் வெள்ளத்தடுப்பு பணி மாதிரி பயிற்சிகள் நடத்த வேண்டும்! மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவு…

சென்னையில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் பணிகள்! அமைச்சர் கே.என்.நேரு தகவல்