வாஷிங்டன்: பாக். ராணுவ இலக்குகள் எதுவும் தாக்கப்படவில்லை என அமெரிக்காவிற்கான இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை; இந்தியாவின் நடவடிக்கைகள் கவனமாகவும் துல்லியமாகவும் உள்ளன. அறியப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தாக்குதல் என விளக்கம் அளித்துள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் கீழ் அதிகாலை 1.44 மணிக்கு ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும் இன்று நாடு முழுவதும் மேலும் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவம் திட்டமிட்டு வந்தது. இதனால் இன்று நாடு முழுவதும் 244 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்களை தாக்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை குறிவைத்து இந்தியா இன்று ஒன்பது இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகி உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில், “சிறிது நேரத்திற்கு முன்பு, இந்திய ஆயுதப்படைகள் ‘ஆபரேஷன் சிந்து’வை தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின. இங்கிருந்துதான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு வழிநடத்தப்பட்டன.”
“எங்கள் நடவடிக்கைகள் கவனம் செலுத்தியதாகவும், அளவானதாகவும், மேலும் பதற்றத்தை அதிகரிக்காத வகையிலும் இருந்தன. பாகிஸ்தானின் எந்த இராணுவ இலக்குகளும் தாக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும், தாக்குதல் முறையிலும் இந்தியா கணிசமான கட்டுப்பாட்டைக் காட்டியுள்ளது,” என்றும் தெரிவித்துள்ளது.