டெல்லி: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பான கோப்புகளை தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்தது ஏன் என நேரில் ஆஜராகி தமிழ்நாடு ஆளுநரின் முதன்மை செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கின் விசாரணைக்கு, ஆளுநரின் முதன்மை செயலர் மார்ச் 17ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசின் மனுவின் நிலை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.
அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது, வேலைக்கு லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதி மன்றத்தல் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில், ராஜேந்திர பாலாஜியை விசாரிக்க இசைவாணையை தமிழ்நாடு ஆளுநர் இதுவரை வழங்கவில்லை என கூறப்பட்டது.மேலும், இது தொடர்பாக ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது, அதற்கு பதில் இல்லை. இருப்பினும் உரிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது. மேலும், முன்னாள் அமைச்சர் என்பதால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர ஆளுநரின் இசைவாணைக்கு காத்திருக்கிறோம் எனவும் தமிழக அரசு தெரிவத்துள்ளது.
அப்போது, வழக்கு தொடர ஆளுநர் இசைவாணை இல்லாமல் சிபிஐ விசாரிக்க முடியும் என கூறிய நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் தமிழக அரின் கடிதம் தொடர்பாக ஆளுநரின் முதன்மை செயலர் மார்ச் 17ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநரின் செயலர் என்ன கூற விரும்புகிறார் எனத் தெரிய வேண்டும் என்பதால் அவருக்கு சம்மன் அனுப்புகிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க அனுமதிகோரிய தமிழக அரசின் மனுவின் நிலை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.