மன்னார்குடி: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் திருவாரூர் தொகுதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.,

திமுக சார்பில்  தேர்தல் பிரசாரத்தின் போது  “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில் தமிழகம் முழுவதும்  பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டன. இந்த புகார் மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்தார். அதன்படி பதவி ஏற்றதும், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. அதற்கான சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார், தற்போது பெறப்பட்ட மனுக்களை வலைத்தளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம், தீர்வுகளும் காணப்பட்டு வருகிறது.  இதவரை  549 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் #உங்கள்_தொகுதியில்_முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொகுதிஎம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

[youtube-feed feed=1]