கேனக்கல்

கேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றில் நீர் வரத்து 43000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மீண்டும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எனவே கபினி அணை, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு உபரிநீர்வரத்து அதிகரித்து வருகிறது.  இதையொட்டி காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த 11ம் தேதி மாலை நிலவரப்படி விநாடிக்கு 23,000 கனஅடியாகவும், நேற்று காலை 30,000 கன அடியாகவும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, பெரியபாணி, சினி அருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அருவிகளில்  28 வது நாளாக தடை விதித்துள்ளது. பரிசல் இயக்கவும் 2வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் மேலும் காவிரி நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.