கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டெனெட்’.
இப்படத்தின் இரண்டு ட்ரெய்லர்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘டெனெட்’ திரைப்படம் ஊரடங்கால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் இப்படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் இப்படம் ஆக்ஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து வார்னர் ப்ரதர்ஸ் தலைவர் டோபி எம்மரிச் கூறும்போது, ‘விரைவில் க்றிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை நாங்கள் அறிவிப்போம். திரையரங்குகள் மீண்டும் பாதுகாப்பாக திறக்கப்பட்டதும் எங்கள் படங்களை திரையிடுவதே எங்கள் நோக்கம்’ என்றார்.

[youtube-feed feed=1]