டெல்லி

லிம்பிக் இறுதி போட்டிக்குள் நுழைந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தாம் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

பாரிசில் நடைபெறும் 33வது ஒலிம்பிக் போட்டியில், நேற்று  நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். வினேஷ் போகத் ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை உள்பட 3 பேரை முறியடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

திடீர்ன 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து இந்த பிரிவில் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

போட்டியில் வெள்ளிப்பதக்கம் யாருக்கும் அளிக்கப்படவில்லை. வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு இந்திய தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில்,

”நான் தோற்றுவிட்டேன், மல்யுத்தம் வென்றுவிட்டது. என்னை மன்னிக்கவும், எனது தாயாரின் கனவும் என்னுடைய தைரியமும் உடைந்து போயுள்ளன.இனிமேலும் போராட என்னிடம் வலுவில்லை . மல்யுத்தத்திலிருந்து(2001 – 2024) விடைபெறுகிறேன். உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்”

என்று பதிந்துள்ளார்.