
உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 61. அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் ’இயற்கை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அதற்காக தேசிய விருதும் பெற்றவர். அதைத் தொடர்ந்து ’ஈ’, ’பேராண்மை’, ’புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என பல்வேறு சமூக பிரச்னைகளை மையப்படுத்திய படங்களை இயக்கினார்.
கடைசியாக அவர் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் ‘லாபம்’ படத்தின் பின் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார். படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்த விஜய் சேதுபதி அவரை கையால் வேகமாக தட்டி எழுப்ப முயன்றுள்ளார். அப்போது அருகிலிருந்தவர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்க அவர் என்னுடைய இயக்குநர். நான் அழைப்பது அவருக்கு கேட்கும். எழுந்து வந்துவிடுவார் என்று உருக்கமாக கூறியுள்ளார். இத்தகவலை பேராண்மை படத்தில் நடித்தவரும் எஸ்.பி.ஜனநாதன் அலுவலகத்தில் வேலை செய்பவருமான நடிகை சரண்யா இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]