லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ ஏப்ரல் மாதமே வெளிவதாக இருந்தது. ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இந்த படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடைபெற்ற போது விஜய்க்கு வருமான வரித்துறை சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

மேலும், சில அரசியல் கட்சியினர் அங்கே போராட்டம் நடத்தியதால் விஜய்யின் படப்பிடிப்புகள் கூட நிறுத்தப்பட்டது.

பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பில் ரசிகர்களை சந்திக்க விஜய் வேன் மீது ஏறி கூலிங் கிளாஸை போட்டு கொண்டு ஒரு நிமிஷம் கிளாஸை சைகை காட்டி விட்டு செல்ஃபீ எடுத்துக் கொண்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி படு வைரலானது .