இந்தியாவில் உள்ள உள்ளூர் அணிகளுக்கு இடையே சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் இந்தப் போட்டி தொடரில் மனிப்பூர் மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையே திங்கட்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற போட்டி சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

அக்ஷய் கர்னீவர்

மகாராஷ்டிராவின் வடகிழக்கு பகுதியான விதர்பா அணியைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷய் கர்னீவர் இந்தப் போட்டியில் வீசிய நான்கு ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை.

உலகளவில் டி20 போட்டிகளில் எந்த ஒரு பந்துவீசாசாளரும் செய்யாத சாதனையை நிகழ்த்தி கர்னீவர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

 

4 ஓவர் 4 மெய்டன் 0 ரன்கள் 2 விக்கெட் என்ற இவரது பந்துவீச்சு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய விதர்பா அணி 20 ஓவரில் 222 ரன்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய மனிப்பூர் 16.3 ஓவரில் 55 ரன்களுக்கு ஆலவுடாகி சுருண்டபோதும் 29 வயதாகும் கன்வீரின் உலக சாதனை எல்லோராலும் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.