சென்னை:
விஹெச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது.
இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மீறி நுழைந்தால் அவர்களை கைது செய்து உ.பி. மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இதனால் தமிழகத்தில் பொது அமைதி பாதிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel