வேலூர்

வேலூர் சிறைத்துறை டிஜிபி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மாணிக்கம் கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார்ர். வேலூர் மத்திய சிறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்டோர் வீட்டு வேலைக்கு இவரை பயன்படுத்தி வந்த நிலையில் டிஐஜி வீட்டில் ரூ.4.5 லட்சம் மாயமானது. இந்த பணத்தை கைதி சிவகுமார் தான் இந்த பணத்தை எடுத்து இருப்பார் என்று அவரை கடுமையாக தாக்கியதாகவும், தனிமை சிறையில் அடைத்து, சிறைத்துறை ஜெயிலர் மற்றும் காவலர்கள் சித்ரவதையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆயுள் தண்டனை கைதி சிவகுமார், தன்னை பார்க்க வந்த தாய் கலாவதியிடம் இதுகுறித்து கூறி அழுதுள்ளார். கலாவதி, வழக்கறிஞர் புகழேந்தி மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, நீதிபதிகள் சிபிசிஐடி காவல்துறையிஅருக்கு உத்தரவிட்டு அதன்படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்., டிஐஜி ராஜலட்சுமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஆயுள் தண்டனை கைதி சிவகுமாரை வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தியது தெரிய வந்தது.

தமிழக சிறைக் கையேட்டின் 447வது விதியின் படி, தண்டனை கைதிகள் யாரையும் நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளியே அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதியை டிஐஜி ராஜலட்சுமி மற்றும் வேலூர் சிறை கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான் ஆகியோர் மீறியுள்ளனர்.

மேலும் டிஐஜி வீட்டில் மாயமான ரூ.4.5 லட்சத்தை ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் திருடியதாக அவரை 95 நாட்கள் தனிமை சிறையில் அடைத்து வைத்து, வேலூர் சிறை ஜெயிலர் அருள்குமரன், டிஐஜி பாதுகாப்பு அதிகாரி ராஜூ என 8 ஆண் சிறை காவலர்கள், 2 பெண் சிறை காவலர்கள் சேர்ந்து கொடுமைப்படுத்தியதும் சிபிசிஐடி விசாரணையில் உறுதியானது.

சிபிசிஐடி காவல்துறையினர், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வேலூர் மத்திய சிறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உட்பட 14 பேர் மீது  5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து டிஐஜி, கூடுதல் எஸ்பி, ஜெயிலர் உட்பட 14 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை பாயும் என உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது வேலூர் சிறைத்துறை சரக டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சரக சிறைத்துறை டிஐஜி முருகேசன் வேலூர் டிஐஜியாக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் ரகுமான் புழல் சிறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.