சென்னை

விசிக எம் பி ரவிக்குமார் விஜய் படத்தின் தி கோட் என்னும் தலைப்பில் சனாதனம் உள்ளதாக கூறியதற்கு புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார்.

இன்று நடிகர் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தனது அரசியல் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்த பிறகு வெளிவந்திருக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் கொடுத்துள்ளது.

இந்தப் படம் சிறப்பாக உள்ளதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தி கோட் படம் குறித்த வேறு வகையான சில விமர்சனங்களும் எழுந்துள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சிஎம்.பி.யான ரவிக்குமார் எக்ஸ் தளத்தில்,

“விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘

என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)”

என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் தமிழக.வெற்றிக்.கழக. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்

“படத்தை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும்”

என்று ரவிக்குமார் எம்.பி. விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார்.