இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் ’சேவ் சக்தி ஃபவுண்டேஷன்’ நிறுவனர் வரலட்சுமி சரத்குமாரும், இணை நிறுவனர் சாயாவும் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.

இதற்காக திருவல்லிகேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலினை சந்தித்த வரலட்சுமி, ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டுவருவதன் விவரங்களை அளித்தார்.