வாஷிங்டன்

அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலில் தலையிட போவதில்லை என அறிவித்துள்ளார்.

பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது

இதனால்  இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது, இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து அனரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் ,

”பதற்றத்தை தணிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுமென நாம் வலியுறுத்துவோம். ஆனால், இந்த போரில் அமெரிக்கா தலையிடாது. ஏனென்றால் அடிப்படையில் இது நமது பிரச்சினை அல்ல. அமெரிக்காவின் திறனால் பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்கு இதில் தொடர்பு இல்லை. இந்தியா ஆயுதத்தை கைவிடவேண்டுமென அமெரிக்காவால் கூற முடியாது. ஆயுதத்தை கைவிடுங்கள் என்று பாகிஸ்தானிடமும் கூற முடியாது. ராஜாங்க ரீதியில் பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொள்வோம்’

என்று தெரிவித்துள்ளார்.