அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இயக்குநராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகின் அனைத்து நாடுகளின் நடவடிக்கையையும் தொடர்ந்து கண்காணித்து வரும் அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ. போர்களை கண்காணிப்பதை முழு நேர பணியாக கொண்டுள்ளது.

இந்த அமைப்பின் புதிய இயக்குனராக காஷ் பட்டேலை டிரம்ப் நிர்வாகம் தேர்வு செய்தது.
இதனை செனட் சபை உறுப்பினர்கள் இன்று அங்கீகரித்தனர். 51க்கு 49 என்ற வாக்குகள் அடிப்படையில் காஷ் பட்டேலின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அவர் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இயக்குநராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
[youtube-feed feed=1]