Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
தமிழ் நாடு

தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வுகளுக்கு முன்பதிவில்லா ரயில் இயக்கம்! தமிழக சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது

Sep 5, 2020

சென்னை: தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வுகளுக்கு முன்பதிவில்லா  சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது. மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 13  தமிழக சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு  இன்று காலை தொடங்கியது.

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து மறும் ரயில்சேவைக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து,  இதையடுத்து தமிழகத்தில் 7-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இந்த ரயில்களுக்கு முன்பதிவு இன்று காலை தொடங்கி உள்ளது.
அதுபோல தேசிய பாதுகாப்பு அகாடெமி மற்றும் கடற்படை அகாடெமி நடத்தும் தேர்வு களுக்கு செல்பவர்களுக்காக இரண்டு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள்  சென்னை-கோவை, மதுரை-திருநெல்வேலி ஆகிய வழியாக இயக்கப்படு வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் விவரம்:

சென்னை எழும்பூர்- செங்கோட்டை (வண்டி எண்: 06181) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 10-ந்தேதி முதல் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக செங்கோட்டை- எழும்பூர் (06182) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 11-ந்தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4.45 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

எழும்பூர்- கன்னியாகுமரி (02633) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் மாலை 5.15 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் நாள் காலை 6.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக கன்னியாகுமரி-எழும்பூர் (02634) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் மாலை 5.05 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-மேட்டுப்பாளையம் (02671) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் இரவு 9.05 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக மேட்டுப்பாளையம்-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் (02672) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு சென்னை வந்தடையும்.

திருச்சி-நாகர்கோவில் (02627) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் காலை 6 மணிக்கு திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கமாக நாகர்கோவில்-திருச்சி (02628) இடையே அன்று மதியம் 3 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த 13 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.

Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LlZPVG1oVXRZeW9J வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..#thiruppugazh
திருப்பம் தரும் திருப்பரங்குன்ற திருப்புகழ்..
திருப்பம் தரும் திருப்பரங்குன்ற திருப்புகழ்..
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..திருத்தணியில் எழிலாகுமா?

#thiruppugazh  #aarupadai​ #murugantemple​ #murugan​ #srilankatemples ​  #temples​ #sivaperuman​ #ilakkiyam​ #tamilgod​ #bhakti​ #sivalayam​ #bhaktisongs​ #palani​ #senthilnathan​ #tiruchendur​ #vetrivel​ #kavadi​ #omsaravanabhava​  #tamilnadu​ #pazhamudhircholai​ #thirupugal​ #tiruchendurmurugan​ #patrikaidotcom #aarupadaiveedu #vaitheeswarankovil #thirupparankundram #pazhamudhircholai #kadamba #walajabad #oothukadu #kathirkaamam
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..திருத்தணியில் எழிலாகுமா? #thiruppugazh #kathirkaamam​
Load More... Subscribe

Post navigation

தேசிக்கொடி அவமதிப்பு: பாஜவில் இருந்து எஸ்கேப்பாகிறார் எஸ்.வி.சேகர்…
வேலூர் அருகே பரிதாபம்: கொரோனாவிலிருந்து மீண்டு வீட்டுக்கு வந்த வட்டாட்சியர் திடீர் மரணம்!

Related Post

தமிழ் நாடு

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்கள்! கொடிஅசைத்து அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின்…

தமிழ் நாடு

விளிம்புநிலை மக்களை கைதூக்கி விடுகிறது திமுக ஆட்சி – தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ் நாடு

சலசலப்பை ஏற்படுத்தி உள்ள பிரவீன் சக்கரவர்த்தி விவகாரம்: ! தனக்கு தெரியாது என்கிறார் செல்வபெருந்தகை…

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer