சென்னை

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஃபேட்மேன் ரவீந்தர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல் பரவி வருகிறது.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிக்பாஸ் 8  சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இம்முறை 18 போட்டியாளர்களை விஜய் சேதுபதி வீட்டிற்குள் அனுப்பினார். இந்த முறை வித்தியாசமான முறையில் போட்டி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

வீட்டை இரண்டாக பிரித்து ஆண்களுக்கு ஒருபக்கம், பெண்களுக்கு ஒருபக்கம் என போட்டி சென்று கொண்டிருக்கிறது. முதல்முறையாக வீட்டிற்குள் வந்த 24 மணிநேரத்திலேயே போட்டியாளர் சாச்சனா வெளியேற்றப்பட்டார். ரசிகர்களிடையே பெரும் விவாதத்திற்கு வழிவகுத்தபின்னர் மீண்டும் அவர் கொண்டுவரப்பட்டார்.

இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷன் லிஸ்டில் ஜாக்குலின், பேட்மேன் ரவி, அருண், முத்துகுமரன், சௌந்தர்யா மற்றும் ரஞ்சித் இருந்தனர் இந்த வாரம் நடந்த எவிக்ஷனில், குறைந்த வாக்குகள் பெற்றதன் மூலம் தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டிலிருந்து வெளியேறிதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகததால் இன்றிரவு ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியிலேயே உண்மை தெரிய வரும்.