டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

2025ம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில், குடியரசு தலைவர் உரையாற்று கிறார். இதைத்தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இதையடுத்து அடுத்த நாளான பிப்ரவரி 1ந்தேதி அன்று நாடாளுமன்றத்தில் பொது மட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியான தனது எட்டாவது பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது கட்டமாக, மார்ச் இரண்டாவது வாரம் முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆதாரப்பூர்வமாக இதுவரை அதற்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை.
கூட்டத் தொடரின் முதல் கட்டத்தின்போது, குடியரசத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்படும். அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பதில் அளிப்பார். இதையடுத்து பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]