சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலினை ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத்துறை அமைச்சர் இன்று சந்தித்துள்ளார்.

அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி சென்னை வந்துள்ளார். அவர் நேற்று சென்னையில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கருத்தரங்கில் பங்கேற்றார்.

கருத்தரங்கில் தொழில்முனைவோர் துறையின் இணை அமைச்சர் ஆலியா பிந்த் அப்துல்லா அல் மஸ்ரூயி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக அரசுக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழக தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் தளவாடங்கள், மேம்பட்ட தொழில்கள், தொழில்முனைவோர், சிறு, நடுத்தர தொழில்கள், சுற்றுச்சூழல் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் புதிய கூட்டு முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்பு பெறுவது குறித்த வாய்ப்புகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இன்று, ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்போது அமீரக அமைச்சர முதல்வர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இன் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.