சென்னை

தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்துக்கு யு/ஏ சான்ரிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் நானி தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக உள்ளார். இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.  நானியின்  முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது.

சென்ற ஆண்டு இறுதியில் நானியின் 30-வது படமாக ‘ஹாய் நான்னா’ படம் வெளியானது. இந்த படத்தில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். மேலும் 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார்.

டிடிவி நிறுவனம் தயாரிக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

தற்போது ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்திற்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படம் வெளியாக உள்ளது.