பெங்களூரு :
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார்.

டி.டி.வி. தினகரனுன் ஒரு எம்பி, மற்றும் பத்து எம்எல்ஏக்கள் பெங்களூர்  சென்றிருந்தனர்.  ஆனால், சிறை விதிப்படி 6 பேர் மட்டுமே சசிகலாவை சந்திக்க முடியும்.

அதன் காரணமாக டிடிவி தினகரன், அவரது மனைவி மற்றும் எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியன் உள்பட 6 பேர் மட்டுமே அவருடன் சந்தித்து பேசினர்.