திருப்பதி

திருப்பதி தேவஸ்தானம் லட்டில் குட்கா பாக்கெட் இல்லை என அறிவித்துள்ளது.

திருப்பதியில்  லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ப முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டைம் கூறினார். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். பக்தர்கள் மற்றும் நாடு முழுவதும் இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது. கடந்த 19 ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கொல்லகூடேம் பகுதியை சேர்ந்த பத்மா என்பவர், திருப்பதி கோவிலில் வாங்கிய லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது புகாரை தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக வெளியான புகாரில் உண்மையில்லை என திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது .மேலும்  லட்டுவில் குட்கா இருந்ததாக சிலர் தேவையற்ற தவறான தகவலை பரப்பி வருவதாக தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது,