வாஷிங்டன்

அமெரிக்கா – இந்தியா இடையே ஆன வர்த்தக பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். பிறகு சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்தார். இந்நிலையில் இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம்,

”இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சு வார்த்தை சிறப்பாக நடந்து வருகிறது. இந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும். 90 நாள் வரி இடைநிறுத்தத்தின் போது ஆப்பிரிக்காவிற்குச் சென்று ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளேன். அதை அறிவிக்க நாட்டின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறேன்.”

என அறிவித்துள்ளார்.