சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய சீமானுக்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான் காவல்துறையினரை கெட்டவார்த்தையால் திட்டினார்.

இதுதொடர்பாக தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ள வருண்குமார் ஐ,பி.எஸ்., அவதூறு பேச்சு தொடர்பாக சீமான் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கருணாநிதியை விமர்சித்து பாட்டுபாடிய சாட்டை துரைமுருகன் கைது விவகாரம் குறித்து சீமான் பேசினார்.

இந்த விவகாரத்தில் சாட்டை துரைமுருகனை நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில் காவல்துறையினர் மற்றும் நீதிமன்றத்தை விமர்சித்து சில தகாத வார்த்தைகளை சீமான் அப்போது பேசினார்.

இதுகுறித்து விளக்கம் கேட்டு சீமானுக்கு திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.