சென்னை

மிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு இல்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டீசல் விலை உயர்வு,தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, அந்த முடிவை கைவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியாகும் செய்திக்கு அரசு போக்குவரத்துத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து துறை இது குறித்து,

”பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசிடம் எந்த கருத்துருவும் இல்லை. பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்த எண்ணம் தமிழக அரசிடம் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது

என விளக்கம் அளித்துள்ளது.