சென்னை: குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை! டி.என்.பி.எஸ்.சி.தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப்4 தேர்வு நடைபெற உள்ள நிலையில்,   மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து குரூப் 4 வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்ட தனியார் பேருந்துகளின் கதவுக்கு A4 ஷீட்டில் சீல் வைத்து பாதுகாப்பு எனக் கூறி அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பேருந்தில் இருந்த சீல் வைத்த வினாத்தாள்  கதவு இடுக்கில் சிக்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வினாத்தாள் வெளியானதாக தகவல்கள பரவி வருகின்றனர்.

மேலும், முக்கியமான வினாத்தாள்,.ள். கண்டெய்னர் வாகனங்களில் எடுத்துச் செல்லமால் தனியார் பேருந்துகளில் எடுத்துச் சென்றது  ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த  ,  டிஎன்பிஎஸ்சி தலைவர் குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும்,  தனியார் பேருந்தில் குரூப் 4 வினாத்தாள் அனுப்பப்பட்டது குறித்து அறிக்கை வெளியிடப்படும். வினாத்தாள் கசியவில்லை; தேர்வர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் விளக்கம் அளித்தார்.