நியூயார்க்:
ருமாறிய கொரோனா 14 நாடுகளில் பரவியுள்ளது என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகிற பான் அமெரிக்க சுகாதார அமைப்பு விடுத்துள்ள செய்தி குறிப்பில், தற்போது உருமாறிய 3 வகை கொரோனா வைரஸ், 14 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து நாட்டிலும், தென் ஆப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்டவை இரு வகை கொரோனா வைரஸ் என்றும், மூன்றாவது வகை வைரஸ், பிரேசில் நாட்டின் அமேசனோஸ் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.