வாரங்க;ல்

கேரளாவில் இருந்து டெல்லி சென்ற ரயில் பயணி படுக்கை உடைந்து விழுந்ததால் மரணம் அடைந்துள்ளார்.

அலிகான் என்னும் 62 வயது முதியவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்ஆவர். கடந்த 15-ந்தேதி இவர் கேரளாவில் இருந்து டெல்லி வரை செல்லும் மில்லேனியம் எக்ஸ்பிரசில் பயணம் செய்தார்.

அலிகான் திருச்சூர் ரயில் நிலையத்தில் தனது நண்பருடன் ரயிலில் ஏறி தனது இருக்கையில் உறங்கியுள்ளார். ரயில் தெலுங்கானா மாநிலம் வாராங்கல் அருகே வந்தபோது, அவருக்கு மேல் அடுக்கில் இருந்த படுக்கை உடைந்து அலி கான் மீது விழுந்ததால் அலி கானின் கழுத்து எலும்பு முறிந்தது.

எனவே ரயில்வே அதிகாரிகள் உடனடியாக அலி கானை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அலி கான், சிகிச்சை பலனின்றி கடந்த 21-ந்தேதி உயிரிழந்தார்.

நேற்று இரவு அலி கானின் உடல் மலப்புரத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது  இன்று காலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ரயிலில் படுக்கை உடைந்து விழுந்து ஒருவரை பலி கொண்ட சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.